அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முனியசாமி (வயது 21) மில் தொழிலாளி இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மின் தொழிலாளி முனியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2,000 அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
