திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா, மேலப்பாளையம் கருப்பன்துறை சமூக ஆர்வலரும், முன்னாள் கருப்பந்துறை பஞ்சாயத்து தலைவருமான எல்.தர்மராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரர் சேகர் ஆகியோரின் பாகப்பிரிவினை பத்திரம் தொடர்பாக மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
அந்த பத்திரப்பதிவுக்கு உரிய ஆவணங்கள் வைத்து கொடுத்த பின்னரும், மேலப்பாளையம் சார் பதிவாளர் காரணம் இன்றி நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள மாவட்டப் பதிவாளர் ராஜாவிடம், மேல்முறையீட்டு மனு கொடுத்தோம்.

ஆனால் அவர் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மூன்று மாதமாக காலம் தாழ்த்தி வந்தார். இதுதொடர்பாக, பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவரிடம் மேல்முறையீட்டு மனு அளித்தோம். எங்களது கோரிக்கையை பரிசீலித்த பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பதிவாளரை அறிவுறுத்தினார். அதன் பின்னரும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மாவட்டப் பதிவாளர் ராஜா என்பவர் எங்களது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவரது இத்தகைய செயல் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மேலப்பாளையம் கருப்பந்துறை சமூக ஆர்வலர் எல்.தர்மராஜ்,

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகார் மனுவின் நகலை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும், திருநெல்வேலி ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறையின் துணைத் தலைவருக்கும் அனுப்பி உள்ளார்.
திருநெல்வேலி செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி / 8939476777
