ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மூலவரான வைத்தியநாத பெருமாளுக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. கோயில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செய்த அலுவலர் கோ. தேவி மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்திகள் : சுந்தரராஜன் & சிவன்ராஜ் எதிரொலி / 8939476777
