மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில்
நடைபெற்றது அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பதவி ஏற்றார். செயலாளராக ராசி ஸ்டுடியோ கண்ணனும் பொருளாளராக ஆனந்தும் பதவி ஏற்றனர்.
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை அரிமா மணிகண்டனும் அரிமா சங்கத்தில் இணையும் புதிய உறுப்பினர்களை அரிமா செல்லப்பாண்டியன் அவர்களும் சேவை திட்டங்களை அரிமா சசிகுமாரும் தொடங்கி வைத்தனர்.

பதவியேற்பு விழாவில் முதன்மை நிர்வாகிகள் பிரேமா செல்லபாண்டி அருண் ஜோதி ரமேஷ் சுப்பையா மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் வாடிப்பட்டி தாலுகா நகை அடகு கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் இருளப்பன் என்ற ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் தலைவராக பொறுப்பேற்ற மருது பாண்டியனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
செய்திகள் / காளமேகம் / எதிரொலி / 8939476777
