உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் மஞ்சங்காரனை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


” தாய்ப்பால் குழந்தையின் முதல் தடுப்பூசி, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தின் அடித்தளம் ” எனும் கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.எஸ்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தாய்ப்பால் என்பது தாயின் ரத்தம். பிறந்த உடன் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சீம்பால் மிக முக்கியமானது என தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கினார். வேல்ஸ் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள், ஆரணி பேரூராட்சி நிர்வாகிகள், தவெக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
