
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோயிலில் ஆடி மாதம் 6,வெள்ளி பால்குடம் எடுத்து,அழகு குத்தி, தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் குடியாத்தம் நகர திமுக அமைப்பாளர் ஆரி. பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


இவ்விழாவில், குடியாத்தம் நகர மன்ற தலைவர் திமுக செயலாளர் அண்ணன் எஸ். சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நகர மன்ற உறுப்பினர் ஆட்டோ மோகன், கவிதா பாபு, நகர துணைச் செயலாளர் ந.ஜம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதி கே .தண்டபாணி, மாவட்ட துணை அமைப்பாளர், எம். முத்து என். விஜயகுமார்,


நகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆர் .ஜி .மாதவன், எஸ். சத்யா, ஆட்டோ கஜேந்திரன், மு. அறிவழகன், பங்கடை முருகேசன்,ஆட்டோ சீனி, டைலர் புகழேந்தி ,ஆர். கிரிதரன், கோடீஸ்வரன், புனிதன் ,சேகர், பாலாஜி, வேப்பநேரி டி. தமிழ்வாணன் மேகலா,மற்றும் பலர் உடன் இருந்தனர் இவ்விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
