ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு செல்லும் ரோட்டில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி E K.S. அவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை செண்பகத் தோப்பு பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் மற்றும் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி சென்றது.


அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி குட்ட தட்டி மற்றும் செண்பகத்தோப்பு விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
