நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மாவட்டம் மணச்ச நல்லூர் தாலுக்கா கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட் பிரதான சாலை ஒழுங்குமுறை, எச்சரிக்கை, வழிகாட்டி மற்றும் தகவல் அடையாளங்கள் சிக்னல் அருகில் உள்ள டிராபிக் பூத் அடியில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ரோஸ் வெள்ளை அரக்கு கலர் போர்வையுடன் இருந்து மல்லாந்த நிலையில் ஆண் ஒருவர், தலைமுடி மற்றும் தாடியுடன் கூடிய நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து, திருச்சி மாவட்டம் கொள்ளிடம் சரக காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று அக்கம் பக்கம் உள்ள கடைகளில் உள்ளவர்களிடம் விசாரணை செய்ததில் மேற்படி நபர் கிடைக்கும் இடங்களில் உணவு வாங்கி உண்டு உறங்கி அப்பகுதியில் சுற்றி திரிபவர் என்றும் யார் என்ற விவரம் தெரியவில்லை விவரம் பெற்றனர். இறந்த நபர் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன்
உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன் மற்றும் முதல் நிலை காவலர் தம்புசாமி உள்ளிட்டோருடன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

திருச்சி மாநகரம் தனியார் திரையரங்கு அருகில், வயது முதிர்வில் உறவின்றி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த முதியவர்!

நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மாநகரம் தனியார் திரையரங்கு அருகில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தவர் தனது பெயர் லட்சுமணன் எனவும் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்ததாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் வயது முதிர்வு காரணமாக அருகில் வசிப்பவர்கள் கொடுக்கும் உணவை கொண்டு ஜீவனம் நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளார். திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் இறந்த நபர் குறித்து விசாரிக்கையில் இறந்த நபர் பெயர் லட்சுமணன் என்பதும் உறவினர்கள் என்ற முறையில் யாரும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர் நெல்சன் பவுன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் காவலர் நெல்சன் பவுன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

செய்திகள் : விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed