உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி , ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் முக்கியத்துவத்தையும், தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களுக்கு ஆதரவான , ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குவதில் குடும்பங்கள், பணியிடங்கள், சுகாதார நிறுவனங்கள் , சமூகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தி பேசினார்.

தலைமை செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் டி.மகேஷ் குமார் , தலைமையாசிரியர் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, டாக்டர் எஸ். கிரிஜாகுமாரி, ஆகியோரின் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்– மாணவியர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் , மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கியில் இளம் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்புடன், இதுவரை 31.25 லட்சம் மில்லி லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக பாஸ்சுரைஸ் செய்யப்பட்டு, குறைப்பிரசவத்தில் பிறந்த , தீவிர சிகிச்சை தேவைப்படும் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கோயம்புத்தூர் உள்பட அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கும் இந்தத் தாய்ப்பால் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்தைப் பெற உறுதி செய்யப்படுகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேஸ் கோர்ஸில் உள்ள தாமஸ் பார்க்-ல் தொடங்கியது. இதில் நியோநேட்டாலஜி ஆலோசகர் மருத்துவர் ஜி. சுஜா மரியம் விழிப்புணர்வு உரையாற்றி, குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியத்தையும், அது தாய் , குழந்தை இருவரின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு அளிக்கும் மகத்தான நன்மைகளையும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி மாணவர்கள், சிறப்புப் பிரமுகர்கள் முன்னிலையில் உற்சாகமான ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சியை நடத்தினர். படைப்பாற்றல்மிக்க ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி , விழிப்புணர்வு பதாகைகள் மூலம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணியை , கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாரதம்மாள் கோவிலை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம் , தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed