நாஞ்சில் அ. பத்பநாபன் தலைமையில் நடைபெற்ற விழாவில், இதழின் ஆசிரியர் பவா சமத்துவன் வரவேற்புரை வழங்க, ந. மாதையன், ஜெயந்தி, ஆர. அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோழர்கள் ஜ. பூ. டார்வின், மானிட மனம் சேகர், சிவ. செந்தமிழன், இசைபாவலர் கீர்த்தி, ஏ. எஸ். குமார், கமலிகா காமராஜர், மறை தி. தாயுமானவன், வழக்கறிஞர் க. அழகேந்தன், கு. சுந்தரகுமார் உட்பட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்ளாக, தோழர் சி. மகேந்திரன், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கல்வியாளர் அமுதா பாலகிருஷ்ணன், மூத்த எழுத்தாளர் உதயை மு. வீரையன், இவர்களுடன், தமிழர் விடுதலை கழகம் சுந்தரமூர்த்தி, காஞ்சி சு. இளங்கவி, ஐ. கார்த்திகேயன், மருத்துவர் சதீஸ் (எ) பரணி, அ. குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் நிறைவு பேருரை ஆற்ற, ஆசுகவி இனியா நிகழ்ச்சி தோகுத்து வழங்க, ச. தமிழேந்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
