ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு சிப்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே செட்டி பள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் ஓரத்தில் மிகவும் தாழ்வாக இருந்த மின்சார ஒயரில் உரசியது அப்போது அந்த லாரியில் இருந்த தார்ப்பாய் பகுதியில் தீப்பொறி பட்டு சிறிய அளவில் தீப்பிடிக்க துவங்கிய உள்ளது.

தன்னுடைய லாரியில் மின்சார வயர் உரசி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கவனிக்காத அந்த லாரி ஓட்டுநர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளார் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அதனால் காற்றின் வேகத்தில் தீப்பொறி அதிக அளவில் லாரியிலிருந்து சரக்கில் பரவி அதிகாலையில் ஏறிய துவங்கி விட்டது.
அதன் பின்னர் அந்த லாரியின் பின்னால் வந்த மற்ற வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் அந்த தீப்பிடி தெரிந்து கொண்டு வந்த லாரியை கடந்து சென்று முன்னால் சென்று லாரி ஓட்டுனிடம் லாரியை நிறுத்த சொல்லி சைகை சரிந்து லாரியை நிறுத்திய பின்னர் தான், தன்னுடைய லாரியில் தீப்பிடித்து ஏறுவதை கவனித்திருக்கிறார்.

உடனே பதில் போய் லாரி டிரைவர் கீழே இறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஒரு செய்வது அறியாத லாரி டிரைவர் மற்றவர்கள் உதவியை நாடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், சிறிது நேரத்திலேயே லாரியும் லாரியில் இருந்த பொருட்களும் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துவிட்டது. இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
