வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி ஊராட்சி, தரணிபாய் ஆனந்தன் மகாலில் இன்று (08.07.2026) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், அவர்கள் மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு
ரூ.3,13,860/- மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள், செயற்கை அவையம், செவித்திறன் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சிந்து (குடியாத்தம்), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்
சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.உமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்.சுபலட்சுமி, உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெய்சங்கர், வட்டாட்சியர் எஸ்.பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
