பெருங்குடி அம்பேகர் நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் இன்று இரவு 7 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் தொடர்ந்து சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் காவல் ஆய்வாளர் ராமர் தலைமையில் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . அதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் உடனடி மின் இணைப்பை சரி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *