மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன், இன்று கீழக்குயில்குடி பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மேற்கொண்ட நூதன பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள ஒரு தேநீர்க் கடைக்குச் சென்ற தனபாண்டியன், திடீரென கடையின் உள்ளே இறங்கி அங்கிருந்த மக்களுக்காகத் தனது கைப்பட தேநீர் (டீ) போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். ஒரு சாதாரண மனிதனாக மக்களுடன் கலந்து அவர் செய்த இந்த செயல், அந்த வழியாகச் சென்ற பாதசாரிகளையும், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

தொடர்ந்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய வேட்பாளர் தா. தனபாண்டியன், “இந்த கீழக்குயில்குடி மண் எனக்கு வெறும் ஊர் மட்டுமல்ல, இது எனது தாய் பிறந்த பூமி. எனது தாய் பிறந்த இந்தச் சொந்த மண்ணில் நின்று உங்களிடம் வாக்குக் கேட்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்,” என்று உணர்ச்சி பொங்க பேசினார். தனது பூர்வீகத் தொடர்பைச் சுட்டிக்காட்டி அவர் பேசிய விதம், அங்கு திரண்டிருந்த கிராம மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் தனக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed