திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட 9 ஏரிகள் சேதமடைந்து மழைநீர் முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 37கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 ஏரிகள் புனரமைத்து, மறு சீரமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.


நாலூர் ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் ராஜ் அவைத்தலைவர் பகலவன் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகளை செய்து குத்துவிளக்கேற்றி, கொடியசைத்து ஏரிகளை மறுசீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.


செய்திகள் : லோகநாதன் / எதிரொலி / 8939476777
