மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது தினந்தோறும் சக்கரத்தாழ்வார் புறப்பாடு திருக்கல்யாணம் நடன நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள் திருவிழாவில் திருக்கோவில் முன்பாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது திருக்கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி தாரணி மற்றும் கணக்கர் முரளிதரன் உள்ளிட்டஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
