தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான, ஜி.கே. மூப்பனாரின் 25 வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஜி.கே. மூப்பனாரின்  நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மாநில இணைச் செயலாளரும், திருநெல்வேலி சக்சஸ் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான ‘சக்சஸ் புன்னகை’ கலந்து கொண்டு ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது த.மா.கா. நெல்லை மாவட்ட துணைத் தலைவர் டி.பி.எஸ். சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *