மதுரைவில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிப்பவர் சாயல்குடியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37 ) ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனுக்கு ஜோதிகா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். தற்போது சாயல்குடியில் இருந்து மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு நண்பருடன் மொட்டை மாடியில் மது அருந்தி உள்ளனர்.
நள்ளிரவில் குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் ஈஸ்வரன் கீழே இருந்த காம்பவுண்ட் சுவர் தடுப்பில் விழுந்ததில் வயிறு பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


போலீசார், ஈஸ்வரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
