ஸ்ரீவில்லிபுத்துறை அடுத்துள்ள குன்னுரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45) இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குன்னூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் கோவில் நோக்கி வந்த போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
