திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆன பிரகாசம், ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தனர்,

பின்னர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் பேசுகையில்;
25 ஆண்டுகளாக திருவள்ளூர் சட்டமன்ற அலுவலகத்தை கைப்பற்ற வேண்டும் என இருந்து வந்த என்னுடைய கனவானது தமிழக முதல்வராக ஜோசப் விஜய், அவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு தான் அது நிறைவேறியதாகவும், இனி 20 ஆண்டுகளானாலும் தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக தான் இது இருக்கும் என சபதம் செய்து பேசினார்.

பின்னர், கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்டம், நகர, ஒன்றியம், கிளைக் கழக நிர்வாகிகள் என அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கட்சி உறுப்பினர்களும் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ; மாறன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed