மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வைகாசிமாதம் நடைபெறும். தமிழகத்தில் 17 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே மாரியம்மன் கோவில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் வைகாசி மாதத்திற்கு முன்பாக பங்குனி மாதம் அமாவாசை அடுத்து வரும் திங்களன்று மூன்று மாதக் கொடி கம்பம் ஏற்றப்படுவது வழக்கம் விழாவையொட்டி திருக்கோவில் அர்ச்சகர் சண்முகம் வைகை ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பொருட்களை நான்கு ரத வீதிகளில் மேளதாளம் முழுங்க சுமந்து வலம் வந்து மூன்று மாத கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மூன்று மாத கொடியேற்றத்தை தொடர்ந்து பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா மற்றும் மூன்று மாத கொடிக்கம்ப உபயதாரர் ராசு அம்பலம் குடும்பத்தார்கள் செல்லம் காவல், முருகன் காவல், தனம் காவல் பரி காவல் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed