விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி கடந்த (2-3-2026) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத, மதுரை மையத்தில் உறவினரின் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தமைக்காக, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அறிக்கையின் பேரில்,

மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி உயிரிழந்த துர்காதேவியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய்.3 லட்சத்திற்கான காசோலையை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரஙகில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் வழங்கினார்.
செய்திகள் : லோகநாதன் / எதிரொலி / 8939476777
