திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் மாசி மாத அமாவாசை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்நிகழ்வில், மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடையெடுத்தும், முதுகில் அழகு குத்தி அம்மன் தேரை வீதி உலாவாக இழுத்து சென்றும், பெண் பக்தர்கள் தீச்சட்டி தலையில் சுமந்தும், தீ மிதித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தியனர்.


பின்னர், மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள அசுரனின் மனைவி வயிற்றை கிழித்து
சூரசம்காரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சக்கான செங்கம் சுற்று வட்டார பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த அங்கலமான சாமி தரிசனம் செய்தனர்.

எதிரொலி / 8939476777
