ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வனத்துறையினர் மலையில் இருந்து இறங்கி வரும்போது, இரண்டு காட்டெருமைகள் விரட்டியதில் மூன்று வனத்துறையினர் காயம் அடைந்துள்ளனர். நான்கு பேர் உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விரியன் கோவில் பீட் பகுதியில் காட்டித்தீ இரண்டு இடங்களில் பற்றி எரிந்தது. இதனை அணைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகளுகாப்பு துணை இயக்குனர் ரவி மீனா உத்தரவின் பேரில் ரேஞ்சர் சரண்ராஜ் ஆலோசனைப்படி வனத்துறை ஊழியர்கள் சுமார் 20 பேர் தீப்பிடித்த பகுதிக்கு சென்று தீயை போராடி அணைத்தனர்.

காட்டுத் தீயை அணைத்த பின்னர், நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மலையில் இருந்து வனத்துறை ஊழியர்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த போது திடீரென அந்தப் பகுதியில் மறைந்திருந்த இரண்டு காட்டெருமைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனை பார்த்த அவர்கள் அருகில் உள்ள பகுதியில் மறைந்த போது பள்ளத்தில் விழுந்து மூன்று வனத்துறை ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. நடந்து வந்து கொண்டிருக்கும்போது எதிரே காட்டெருமை வந்ததால் நள்ளிரவு நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் நான்கு பேர் சிதறி ஓடி உயிர் தப்பினர்.

நல்ல வேலையாக எந்த ஆபத்து இல்லாமல் வனத்துறையினர் உயிர் தப்பினர். மேற்கு தொடர்ச்சி மலையில் எரிந்த காட்டுத்தீயை அடைத்து விட்டு நள்ளிரவு நேரத்தில் இறங்கி வந்த வனத்துறை ஊழியர்களை காட்டெருமை தாக்கி மூன்று வனத்துறை ஊழியர்கள் காயமடைந்ததும், நான்கு பேர் உயிர் தப்பியதும் வனத்துறை ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
