கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, பாசனத்திற்காக 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 13.02.2026 முதல் 120 நாட்களுக்கான தண்ணீரை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

உடன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், வட்டாட்சியர் திருமதி ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777
