ராசபாளையத்தில் பெருந்தகை P.A.C.இராமசாமிராஜா அவர்கள் 1938–ம் ஆண்டு இராஜபாளையம் மில்ஸ் என்ற நூற்பாலை தொடங்கி அதன் வளர்ச்சியாக விருதுநகர் அருகில் துலுக்கபட்டியில் சிமெண்ட் ஆலை தொடங்கினார்
அவரது மகன் மதிப்பிற்குரிய ராம்கோ தொழில் குழும சேர்மன் மறைந்த திரு.P.R.இராமசுப்பிரமணியராஜா அவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான தொழிலகளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அன்னாரது 91–வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது நினைவிடத்தில் தற்போது ராம்கோ குழுமத்தை சிறப்பாக நடத்தி வரும் அவரது மகன் ராம்கோ குருப் சேர்மன் திரு.P.R.வெங்கட்ராமராஜா அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தி நினைவு கூறும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் திரு.N.R.K. கஜபதிராஜா, N.R.K.இராம்குமார்ராஜா மற்றும் அவரது உறவினர்கள் தொழில் வணிக பிரமுகர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

AITUC மில்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் V.இரவி, தோழர் P.K.விஜயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சங்கத் தோழர்கள் மாரிமுத்து,ராஜபாண்டி, ராமசுப்பு லெனின் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
