திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பிற்கான தேர்தல் இன்று காலை நடைப்பெற்றது ,  திருவள்ளூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தா.மீகாவேல் விதிமுறையை எடுத்துரைத்து தேர்தலை நடத்தினார்.

முதலில் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடப்பெற்றது பின்பு செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தினார் தலைவராக கலைமணி என்பவரும் துணைத் தலைவராக மகேஸ்வரி என்பவரும் கல்வியாளர் உறுப்பினராக முன்னாள் மாணவர் இளவழகன் என்பவரும்  போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் கலந்துக்கொண்டு வாழ்த்தினார் , ஆசிரியர்கள் ஞான ஒளி, விஜி, அம்மு, கோமதி மற்றும் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 893947677

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *