இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் பிற பொருட்களை ஆற்றில் விட்டுச் செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆற்றை மாசு படுத்தும் இது போன்ற செயல்களால் தாமிர பரணி ஆறு பாழாகி அதன் நீர் குடிக்க தகுதியில்லாத அளவிற்கு மாசடைந்து விட்டது. இதனால் ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளது.


இந்த எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
