கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R.ஸ்டாலின் IPS அவர்கள் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு விசாரணக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

அவருடைய உத்தரவுபடி, 18.07.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட அலுவலகம், உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. மேலும் இன்று பெறப்பட்ட பொதுமக்கள் மனுக்கள் மீதான நடவடிக்கையை தீவிரபடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்கள்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
