கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி ந்கரம், பழையபேட்டையில் பருவத ராஜகுல மீனவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகளின் நல சங்கத்தின் சார்பில் 6 ஆம் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

அங்காளம்மன் திருக்கோயில் சன்னதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவிற்கு ம இளங்கோ, குமாரவடிவேல், ஸ்ரீரங்கன், ஜெயக்குமார், முனுசாமி, ராஜாகணேசன், கோவிந்தராஜ், செந்தில்குமார், ஜெகநாதன், நாகராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் வளர்ச்சி செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் செல்போன்களை எடுப்பதை விட புத்தகங்களை கையில் எடுத்தால் வெற்றி பெறுவது மட்டுமின்றி வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். ஆகையால் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் நீங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வாழ்வு முன்னேர்வதோடு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்,

இதனை தொடர்ந்து நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு பொது தேர்வுகளில் முதல் மூன்று மட்டுமன்றி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்க தொகை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்த விழாவில் சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ கணேஷ், ஆதித்யா, பாலகிருஷ்ணன், மெதிலேஷ்,மீனாட்சி மனசீனிவாசன் ஆறுமுகம், அகமித்திரா மற்றும் சீனிவாசன் பாலமுருகன் ஸ்ரீரங்கன், கோவில் பூசாரி கோவிந்தராஜ், சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed