சிலம்பம் விளையாடி கொண்டாடி மகிழ்ந்த சமூக ஆர்வலர் வெ.இ.நா. சாதிக் அலி!

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் ரமலான் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திருநெல்வேலி மாநகராட்சியின் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மேலப்பாளையம் பகுதி துணைச் செயலாளருமான ஆமீனா பீவி சாதீக் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மேலப்பாளையம் ஆமீன்புரம் நான்காவது தெருவில் நடைபெற்ற சிறப்பு சிலம்பாட்டப் போட்டியில் கவுன்சிலர் ஆமீனா சாதீக் கணவரும், மேலப்பாளையம் பகுதியின் சிறந்த சமூக சேவகருமான வெ.இ.நா. சாதீக் அலி, சிலம்பாட்டம் ஆடினார். இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி / 8939476777
