சோழவந்தான் நைனார் ஜும்மா தொழுகை பள்ளிவாசலில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர தொழுகையில் ஈத் முபாரக் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் அனைவரும் பரிமாறிக் கொண்டனர் புனித ரம்ஜான் திருநாளை முன்னிட்டு பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் ஷாகுல் ஹமீது செயலாளர் முகமது உசேன் பொருளாளர் அக்பர் அலி முன்னிலையில் இஸ்லாமியர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிகமானோர் கூடினர்.
பள்ளிவாசலில் ஹஜ்ரத் தௌ பீக் நைனார் புனித ரம்ஜான் மாதத்தின் 30 நாள் நோன்பின் மகத்துவத்தை அல்லாஹ்வுக்காக நியத் வைத்தவர்களுக்கும் சொர்க்கம் புனிதமாக்கப்படும் இன்று சதக்கத்துல் பித்ரு ரமலான் தொழுகையில் அன்பும் பண்பும் மனிதநேயமும் மகிழ்ச்சியும் உலக சமாதானம் பெற உலக மக்கள் பூரண நலம் பெற வேண்டியும் நிம்மதி பெறவும் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் என பயான் செய்து புனித ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையை சிறப்பாக நடத்தினார் தொழுகையில் துவா செய்து ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஈத் முபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி சந்தோஷத்துடன் பண்டிகையை கொண்டாடினர் சோழவந்தான் பகுதியில் அனைத்து தரப்பினரும் ஜாதி மதம் பாராமல் அனைவரும் புனித ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை சலாம் கூறி மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சிமத நல்லிணக்கத்த காட்டுவகையில் அமைந்திருந்தது பெருமை வாய்ந்தது உப தலைவர் ஜாகிர் உசேன் இணைச் செயலாளர் நாசர் அலி மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் அனைத்து மக்களுக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஜக்காத் எனும் தர்மம் வழங்கும்நிகழ்ச்சி நடந்தது.

கீழமாத்தூர் தொழுகை பள்ளிவாசலில் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு ஜமாத் கமிட்டியினர் ஏராளமானோர் திருக்குர்ஆன் நன்னூல் பைத் ஓதிக்கொண்டு ஈத் கா பள்ளிவாசலில் ஊர்வலமாக வந்தனர் அங்கு பள்ளிவாசல் ஹஜரத் அப்துல் காதர் புனித ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினார் ஏராளமான முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் துவா செய்து ஈத் முபாரக் வாழ்த்துக்கள் சலாம் கூறி ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் இதுபோல் முள்ளி பள்ளம் தேனூர் மேலமாத்தூர் திருவாளவாயநல்லூர் நாச்சிகுளம் கருப்பட்டி ஆகிய பள்ளிவாசல்களில் ஏராளமான முஸ்லிம்கள் புனித ரம்ஜான் பண்டிகையை சிறப்பு தொழுகையுடன் மகிழ்ச்சியுடன் சமூக நல்லிணக்கத்துடன் கொண்டாடினர்.
செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777
