கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட இலுப்பு தோப்பு சீனிவாசா நகரில் குடியிருப்பு பகுதி
குப்பையை கொட்டி திறந்த வெளியில் எரிக்கின்றனர். இதன் அருகே, குடியிருப்புகள் அமைந்துள்ளதால் புகைமூட்டத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.


பிளாஸ்டிக், இதர கழிவுகள் எரிக்கப்படுவதால், நச்சுப்புகை வெளியேறி உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள், முதியோர் சுவாச கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனை பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


எதிரொலி / 8939476777
