நடிகர் ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைகிறார் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜமோகன் பதில் ;
என்ன நிறை குறை இருந்தாலும் அமைச்சராக இல்லை உங்கள் சகோதரனாக அங்கு உட்கார்ந்திருக்கிறேன் என் பெயரில் லெட்டர் போட்டால் சிட்டாக வந்துவிடும் தொலைபேசியிலேயே வேலையை முடித்து விடுவேன் மாணவர்களிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஆஸ்டின்பட்டி தனபாண்டியன் நகரில் உள்ள PTR பொறியியல் கல்லூரியில் செயல்படும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் (Model School) பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சருக்கு முன்னதாக மாணவர்கள் சிலம்பம் சுற்றியும்,பறையடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அமைச்சருடன் மாணவர்கள், ஆசிரியர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் மாணவர்களிடம் பேசும்போது:
ஆய்வு என்பது வாத்தி ரைட் என்பது போல் நினைத்துக் கொள்ளாதீர்கள் உங்களை பார்க்க வந்திருக்கிறேன். அமைச்சராக இல்லை அண்ணனாக சொல்கிறேன் குழந்தை எதற்கு அழுகிறது என்று தாய்க்கு தெரியும் அப்பா தனது குழந்தையை தனது தோளில் சுமப்பார் குழந்தைகளா அப்பா அம்மா தான் தெய்வம். படித்து பெரிய ஆளாகிய நீங்கள் இதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வரும்போது நான் பெருமைப்படுவேன் உங்களுக்கு என்ன நிறைகுறை இருந்தாலும் அமைச்சராக இல்லை உங்கள் சகோதரன் அங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என் பெயரில் லெட்டர் போட்டால் சிட்டாக பறந்து வந்துவிடும் போன்லலே வேலைய முடித்து விடுவேன் .
கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் அன்னைக்கு தான் எனக்கு பொன்னாள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசும்போது:
மதுரை தோப்பூர் அரசு மாதிரி பள்ளி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களை பார்த்து அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய வந்துள்ளேன்.அவர்களுக்கு வேணுன்ற விஷயங்களை செய்வதற்காக இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அவர்களுக்கு பயனுள்ள விஷயமாக இது அமையும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுத்துள்ளேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கவும் இந்த மாதிரி நிரந்தரவு வகுப்பு எடுக்கிறேன்.
மாணவர்களை உற்சாகப்படுத்தி அந்த மாணவர்கள் காணும் கனவெல்லாம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். மாணவர்களுக்கு ஏதும் குறைகள் உள்ளதா என்ற கேள்விக்கு: தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் அதிக மார்க்க வாங்கி உள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளனர். இனி வருங்காலங்களில் அதைவிட இன்னும் அதிகம் மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் குறைகள் எல்லாம் எதுவும் இல்லை. அதிகமான மாணவர்கள் நல்ல மார்க் வாங்கியுள்ளனர்.
ஐஐடி ,நீட் தேர்வு போன்ற உயர்நிலை கல்வி இந்த வருடம் தேர்வில் அதிக வெற்றி பெற வேண்டும்.
தமிழக அரசு நீட் தேர்வுகளுக்கு 7.5 இட ஒதுக்கீடு உள்ளது இன்னும் ஒதுக்கீடு அதிகப்படுத்தபடுமா என்ற கேள்விக்கு:
ஏற்கனவே போட்டது ஒரு பவுண்டேஷன் அதற்கு மேல் அழகு மாளிகை கட்ட வேண்டும். மாணவர்களின் ஒவ்வொரு கனவும் சாத்தியமாக வேண்டும். ஐஏஎஸ் கிரிக்கெட் போன்ற துறைகளில் தனித்திறமை சாதனை புரிய மாணவர்கள் திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கின்ற கேள்விக்கு: சிறு சிறு வசதிகள் குறைவாக இருக்கலாம் அது நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் ராகவா லாரன்ஸ் த வெகவில் இணைந்து திருச்சியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு:
பள்ளிவளாகங்களில் நாங்கள் அரசியல் பேசுவது கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம் தமிழக வெற்றி கழகம் சிறந்த தலைமை உள்ளது என்பதால் வேடந்தாங்கல் சரணாலயம் போல் பலரும் வருகிறார்கள் பலரும் இணைகிறார்கள் என்றார்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
