திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆய்வு மேற்கொண்டார். பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடம் மற்றும் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

பின்பு, படகுமூலம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு சென்று முகத்துவாரத்தில் மணல் தூர்ந்த பகுதிகளையும் தூண்டில் வளைவு பகுதிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழக வெற்றிக்கழக மாவட்ட துணை செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய செயலாளர்கள் ஜமிலாபாத் சலீம், சோழவரம் அருண்பாண்டி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
