நிகழ்வின் தொடக்கமாக ஆரோக்கிய பாரதி ஒருங்கிணைப்பாளர் கௌதம் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்பு விருந்தினராக யோகா மருத்துவர் ஹேமலதா அவர்கள் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சியும் வாழ்வியல் யோகாவும் கற்றுக் கொடுத்தார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர், கம்பன் கழக செயலாளர் மருதம் க. அருள், பொருளாளர் மு.ஸ்ரீரங்கன், துணைத் தலைவர்கள். க.வே.சிங்காரவேலன், மில்லட், இரா.முருகன், துணைச் செயலாளர் ஜி கே சீனிவாசன் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளி ஆசிரியர் மாகிரா செய்தார். விழா முடிவில் தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளி நிறுவனர் குரு. டாக்டர்.மது மொழி ஆனந்த் நன்றி உரை கூறினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
