காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது. இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். இது அலுவலகத்தின் முன்புறம் உள்ள முற்றத்தில் விழுந்து தீப்பற்றியது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு எஸ்கேப்பானது.

பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அன்புமணி கண்டனம்: கூட்டணி கட்சி தலைவர் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட ஆளும் திமுக அரசுக்கு துப்பில்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
செய்திகள் : மகேஷ் / எதிரொலி / 8939476777
