வீரம் விளைந்த மண்ணாம் வீரவலசை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் வீரசக்தி விநாயகர் மற்றும் பசுபதி விநாயகர் கோவில்களில் ஐந்தாமாண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பெண்கள் சீருடை சேலைகள் அணிந்து கும்மி குலவையிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்தனர். விநாயகருக்கு கொழுக்கட்டை , சுண்டல் , தேங்காய் பழம் , அவல் பொறிகடலை வைத்தும் , இறுதியில் அறுசுவை சைவ உணவு அன்னதானமாக பரிமாறப்பட்டது… விழா நிகழ்ச்சிகளை வீரவலசை கிராமப் பொதுமக்கள் மற்றும் மாமன்னர் மருதபாண்டியர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி / 8939476777
